ஓய்வு பெற்ற ஆசிரியர் நியமனத்திற்கு நேர்காணல் தேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2023

ஓய்வு பெற்ற ஆசிரியர் நியமனத்திற்கு நேர்காணல் தேதி அறிவிப்பு

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான நேர்காணல் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்கும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 1ம் தேதி வெளியிட்டது.இதற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். படித்த இளைஞர்கள் பலர் இருக்க, ஓய்வு பெற்றோருக்கு வாய்ப்பு அளிப்பதா என கேள்வி எழுப்பின.

 இதற்கிடையில் விண்ணப்பித்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான நேர்காணல் மாகி பிராந்தியத்தில் வரும் 7ம் தேதியும், மறுநாள் 8ம் தேதி புதுச்சேரி பள்ளி கல்வித் துறை வளாகத்திலும், காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலும் நடக்கும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.விருப்ப ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அசல் உத்தரவு ஆணை, சான்றிதழ்கள், ஓய்வூதிய ஆணை, வயது மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களை கொண்டு வர வேண்டும். நேர்காணல் தேர்வில் கலந்து கொள்வதற்கு பயணப்படி எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி