இனி 2 ஆண்டுகள் பி.எட். படிப்புக்கு அனுமதி இல்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2024

இனி 2 ஆண்டுகள் பி.எட். படிப்புக்கு அனுமதி இல்லை!

 

கல்வி நிறுவனங்களில் வருகின்றப் கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகள் பி.எட் படிப்புகளுக்கு அனுமதி இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.


தற்போது கல்வி நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் பி.எட் படிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.


மேலும், சில கல்வி நிறுவனங்களில் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் பட்டப்படிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளன. அதன்படி படிக்கும் மாணவர்கள் பி.எஸ்.சி. அல்லது பி.ஏ. படிப்புடன் பி.எட் படிப்பையும் மேற்கொள்வார்கள்.


இந்த நிலையில், 2024-25 கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகள் பி.எட் படிப்பை நடத்த கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


அதற்கு பதிலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் படிப்பை மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி