முதுநிலை அரசு டாக்டர்களுக்கு, மாதந்தோறும் 9,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அரசு உறுதியளித்து உள்ளதாக, அரசு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அரசு முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை, அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.
இதில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இந்த பேச்சில், அனைத்து முதுநிலை டாக்டர்களுக்கும், ஒரே மாதிரியான ஊக்கத்தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணைவிரைவில் வெளியிடப்படும் என, அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து, டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:அமைச்சருடன் நடந்த பேச்சில் சுமுகத்தீர்வு ஏற்பட்டுள்ளது. அரசாணை 293ன்படி, முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கு, 5,500 ரூபாய்; 9,000 ரூபாய் என, இரண்டு வகையாக வழங்கப்பட்டு வந்தது.தற்போது, அனைத்து முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கும் ஒரே மாதியாக, 9,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பட்டய படிப்பு டாக்டர்களுக்கும் 5,000 ரூபாய் மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பணி மூப்புக்கு ஏற்ப, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்குவதுதொடர்பான, 354 அரசாணையை பரிசீலிக்க, கமிட்டி அமைக்கப்படும் என்றும், அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி