தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வந்து அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
12 ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் இதுவரை ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
பணிநிரந்தரம் நம்பிதான் 12 ஆயிரம் குடும்பங்கள் காத்துள்ளனர்.
தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உதவி தொகையை செயல்படுத்தியதை போல, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து விடியல் தர வேண்டும்.
இது திமுக 181-வது தேர்தல் வாக்குறுதி தான்.
ஜனவரி 23 அன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பணிநிரந்தரம் அறிவிப்பை முதல்வரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளோம்.
என்றார்.
*************************
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
Cell : 9487257203
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி