பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயலாளர் மனிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடுமுழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் 'நெட்' தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நெட் தகுதித் தேர்வு ஆண்டு தோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.
பல்வேறு பல்கலைக்கழகங்கள் பி.எச்டி ஆராய்ச்சி படிப்பிற்கு நுழைவுத் தேர்வுகளை பல்வேறு நிலைகளாக நடத்தி வருகின்றன. தேசிய கல்விக் கொள்கை-2020 பி.எச்டி மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்பதை ஊக்குவிக்கிறது. இதன்காரணமாக, இதுகுறித்து மதிப்பாய்வு செய்ய பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், யு.ஜி.சி. நிபுணர்கள் குழுவின் 578-வது கூட்டம் கடந்த மார்ச் 13-ந்தேதி கூடியது. இந்த கூட்டத்தில், வரும் 2024-25-ம் கல்வியாண்டு முதல், பி.எச்டி மாணவர் சேர்க்கைக்கு 'நெட்' மதிப்பெண் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகிற ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி