School Morning Prayer Activities - 19.03.2024 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2024

School Morning Prayer Activities - 19.03.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.03.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல் :ஊழியல்

அதிகாரம் :ஊழ்


குறள்:379


நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்.


விளக்கம்:


நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.


பழமொழி :

Prevention is better than cure


வருமுன் காப்பதே சிறந்ததே


இரண்டொழுக்க பண்புகள் :


 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :


நீங்கள் ஒரு மனிதனின் மனதை அறிய விரும்பினால், அவனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள். --ஜோஹன் வொல்ப்காங் வான் கோதே


பொது அறிவு : 


1. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?


விடை: தாய்லாந்து 


2. வெங்காயத்தில் அதிகளவு உள்ள வைட்டமின் எது? 

வைட்டமின் C


English words & meanings :


 Ubiquitous - Omnipresent;   எங்கும் நிறைந்தது.

Unbiased - fair; பாரபட்சமற்ற.


ஆரோக்ய வாழ்வு : 


காசினி கீரை: உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை. எவ்வளவு மோசமான புண்கள் இருந்தாலும், அதை காசினி குணப்படுத்திவிடும். அல்லது இந்த கீரையின் சாறினை, புண்களின் மீது தடவினாலும், புண்கள் விரைவில் ஆறிவிடும்.


நீதிக்கதை


 தீவினை அச்சம்


தீய செயல்களைச் செய்வதற்குப் பயப்படுதல்


ஆலமரத்தில் இருக்கும் பறவையைக் கொல்லும் பொருட்டு வேடன் குறிபார்த்துத் தன் வில்லை வளைத்து அம்பு எய்ய முயன்றான். மேலே பார்த்துக்கொண்டே வந்ததால் கீழே புற்று உள்ளதை அறியாமல் புற்றின்மேல் காலை வைத்து அழுத்தினான். அழுத்தியதனால் புற்று மண் இடிந்து உள்ளே உள்ள நாகத்தின்மேல் விழுந்தது. மண் விழுந்ததும் நாகம் சீறி மேலெழும்பிப் புற்றில் கால்வைத்திருந்த வேடனைத் தீண்டியது. நாகம் தீண்டியதை அறிந்த வேடன், "நாம் அப்பறவையைக் கொல்ல, வில்லை வளைத்து அம்பு எய்ய முயன்றோம்; அம்முயற்சியாகிய தீய செயலே, 'தன் நிழல் தன்னை விடாது' என்ற முதுமொழிப்படி நம்மை நாகமாக வந்து தீண்டியது" என்று தான் செய்த தீமைக்கு வருந்தி இறந்தான். இதை வள்ளுவரும் தீய காரியங்களைச் செய்தவர் கெடுதல் அவர் நிழல் அவர் பாதத்தை விட்டு விலகாமல் அவர் பாதத்திலே தங்கியிருப்பதைப் போலாகும் என்று கூறியுள்ளார்.


இன்றைய செய்திகள் - 19.03.2024


*தேர்தல் நடத்தை நெறிமுறை: பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்ல வேண்டும்- ராதாகிருஷ்ணன்


*ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி; 88% வாக்குகள் பெற்றார்.


*எகிப்துக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் உதவித்தொகை; ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு.


*2வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.


Today's Headlines


 *Election code of conduct: Public should carry money with proper documents- Radhakrishnan


 *Putin won in the Russian presidential election;  He got 88% of the votes.


 *US$8 billion given as aid to Egypt;  EU Declared.


 *Royal Challengers Bangalore team won the title of "Champions" in the 2nd Women's Premier League 20 Overs Cricket Tournament.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி