புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்துக்கு கற்போர் , தன்னார்வலர்களைக் கண்டறிதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2024

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்துக்கு கற்போர் , தன்னார்வலர்களைக் கண்டறிதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

" புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022 -27 " செயல்படுத்துதல் கற்போர் , தன்னார்வலர்களைக் கண்டறிதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


தமிழ்நாட்டில் , கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் , 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் , புதிய பாரத எழுத்தறிவுத் திட்டமானது முற்றிலும் தன்னார்வல முறையில் , அனைத்து 38 மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டத்தின் வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 இலட்சம் பேர் தங்களது அடிப்படை எழுத்தறிவுக் கல்வியைப் பெற்று பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


 இவ்வாறு பெற்ற கல்வியின் மூலம் அன்றாட வாழ்வில் தற்சார்பு , வாழ்வியல் திறன்களில் மேம்பாடு , சுய வருவாய் ஈட்டுதலில் முன்னேற்றம் , அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த நிதி மேலாண்மையில் தெளிவு , அடிப்படைச் சட்டங்களிலும் மற்றும் அரசு சார் திட்டங்களிலும் போதுமான விழிப்புணர்வு போன்ற போன்ற அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப்பெற்று இத்திட்டக் கற்போர்கள் பயனடைந்துள்ளனர்.


தற்போது , பார்வையிற் குறிப்பிடப்பட்டுள்ள திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட ஒப்புதல்களின்படி , வருகின்ற 2024-25ஆம் ஆண்டிற்கு தங்கள் மாவட்டம் சார்ந்த அனைத்து ஒன்றியங்களுக்கான கற்போர் மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை இலக்கினை உரிய கணக்கெடுப்பின் வாயிலாக நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.


Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி