High tech Lab -கணினி ஆசிரியர்களின் கண்ணீர் கதையும்
May 29, 2024
High tech Lab -கணினி ஆசிரியர்கள் வேதனை!!!
கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை
ஒவ்வொரு முறையும் புதிய பணியிடங்களை தோற்றுவிக்கும் பொழுது கணினி சம்பந்தப்பட்ட அனைத்து பணியிடங்களும் தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு அவர்கள் மூலமாகவே பணியமற்ற படுகிறார்கள்.
ஏன் மற்ற பாடங்களுக்கு மற்றும் ஆய்வக உதவியாளர் பணிகளுக்கு அவ்வாறு செய்வதில்லை.
அவர்களுக்கு நேரடியாக அரசே தேர்வு நடத்தி பணியாட்களை தேர்வு செய்கிறது.
இப்பொழுது அறிவித்திருக்கிற hi tech lab உதவியாளர் பணி அரசு ஏன் தனியார் மூலம் பணி அமர்த்துகிறது.
15 வருடங்கள் கழித்து இளநிலையில் கல்வியியல் கல்லூரி முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக எண்ணியிருந்தோம் ஆனால் தற்பொழுது வருத்தமளிக்கக் கூடிய நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கல்வித்துறை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு நிதி நிலைமைக்கு ஏற்ப நிரப்புவதாக அறிவித்திருந்தார்கள்,
நாங்கள் அரசி நிதி நிலைமையை நன்கு அறிந்திருக்கிறோம்
எனவே குறைந்த சம்பளமாக இருந்தால் கூட நிரந்தர பணியாக அரசு பணியாக நேரடியாகவே தமிழக அரசு பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள்.
தனியாருக்கு இந்த பணியிடங்களை ஒதுக்காமல் நேரடியாக அரசு பணியிடங்களாக அரசு அறிவிக்க வேண்டும்
இந்த பணியிடங்களை உடனடியாக நிறுத்தி முறையான அறிவிப்புகள் வெளியிட்டு தேர்வு முறையோ அல்லது employment seniority அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்பது கணினி ஆசிரியர்களின் கோரிக்கை
இந்த அரசு தனியார் மையத்திற்கு எதிரான அரசு என்பதை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்
விரைந்து நல்லதொரு மாற்றத்தை நீங்கள் செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்
2006- எல்காட்- 1880 - பணியிடங்கள் நிரப்பியது (அந்த குழப்பங்கள் சேர்ந்து நிலைமை சரியாக பல வருடங்கள் எடுத்துக் கொண்டது.)
இப்பொழுது- KELTRON
தனியார் மையத்தை கைவிடுக
அரசே பணியிடங்களை நிரப்ப வேண்டும்
எப்பொழுதுதான் கணினிக்கும் கணினி ஆசிரியர் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கும் தீர்வு கிடைக்கும்
கண்ணீர் தத்தளிக்கும் கணினி ஆசிரியர்.
P.Sathiyapriya
8525030095
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
நாட்டிலேயே கல்வியின் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறிவரும் தமிழக முதலமைச்சர், தமிழருக்கே வேலைவாய்ப்பு என கூறி வரும் தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை விளம்பரம் செய்து வருகின்றனர் பள்ளி கல்வித்துறைக்கு என்று பல லட்சம் கோடி ஒதுக்கும் தமிழகம் 8,500 பணியிடங்களை தனியார் குறிப்பாக வெளி மாநில கேரளா ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆபரேட்டர் மற்றும் பயிற்றுநர் முறையான பி எட் கணினி பட்டதாரிகளை நியமிக்காமல் குறுக்கு வழியில் பணியிடங்களை நிரப்புவது 67,000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகள் விலை இன்று தெரிவித்து வரும் இந்த வேளையில் அவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு தமிழக அரசு வழங்க வேண்டி கேட்டுக் கொள்கின்றோம்
ReplyDelete