கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பிவிஎஸ்சி (கால்நடை மருத்துவம்) மற்றும் பிடெக் படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி (நாளை) முடிவடைவதாக இருந்தது.
கடந்த 19-ம் தேதி நிலவரப்படி, கால்நடை மருத்துவ படிப்பில் சேர 11,586 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேருவதற்கு 2,392 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, பிவிஎஸ்சி, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி