மாநில கல்விக்கொள்கை ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு - முக்கிய அம்சங்கள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2024

மாநில கல்விக்கொள்கை ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு - முக்கிய அம்சங்கள் :

 

மாநில கல்விக்கொள்கை ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

முக்கிய அம்சங்கள் :👇👇👇



* தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் TET தேர்வை  கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை...

* 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக , மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்தார் . இக்குழு பொதுமக்களிடம் கருத்து பெற்று விரிவான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது . அதில் , 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் , தமிழ் , ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.


* நீட் தேர்வு வேண்டாம் - மாநில கல்விக்கொள்கை ஆய்வறிக்கை 


* இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். 


* கல்லூரிகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. 11ம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும். 


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி