தமிழகத்தில் கலெக்டர்களுக்கு தனி (கல்வி) கிளார்க் நியமனம்: பள்ளி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2024

தமிழகத்தில் கலெக்டர்களுக்கு தனி (கல்வி) கிளார்க் நியமனம்: பள்ளி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

 

அரசு பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு, மாதிரி பள்ளிகளை கண்காணித்தல் உட்பட கல்வித்துறை சார்ந்த பணிகளுக்காக கலெக்டர்களுக்கு தனி (கல்வி) கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் அவரது அலுவல் சார்ந்த தகவல், துறை ரீதியான கூட்டங்களை ஒருங்கிணைத்தல் உட்பட பல்வேறு பணிகளுக்கு கலெக்டருக்கு உதவியாக தனி கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளர் அந்தஸ்தில் இவர் நியமிக்கப்படுகிறார்.


கலெக்டருக்கு தனி கிளார்க்


இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:


நியமிக்கப்பட்டுள்ள தனி கிளார்க் பள்ளிகள் சார்ந்த பணிகளை கண்காணிக்க வேண்டும். இது குறித்த விவரங்களை கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.


இவர்களுக்கான பயிற்சி வகுப்பு ஜூலை 18, 19 களில் நடக்கிறது. அதற்கு பின் கலெக்டரின் தனி (கல்வி) கிளார்க் பணியில் ஈடுபடுத்தப்படுவார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி