ஆசிரியருக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தள்ளிவைப்பு: 3 மாவட்டங்களில் ஜனவரி 21-ல் தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2024

ஆசிரியருக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தள்ளிவைப்பு: 3 மாவட்டங்களில் ஜனவரி 21-ல் தொடங்குகிறது

தமிழகத்தில் கடலூர் உட்பட 3 மாவட்டங்களில் நடைபெறவிருந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆசிரியர்களுக்கு ஒன்றியளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.


இதற்கிடையே கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 2-ம் பருவத் தேர்வு ஜனவரி 6 முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. எனவே, இந்த 3 மாவட்டங்களில் மட்டும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 21 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட வேண்டும். அதன்படி 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 21, 22-ம் தேதிகளிலும், 4, 5-ம் வகுப்புக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளிலும் பயிற்சிகள் நடைபெற வேண்டும். எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் கற்பிப்பது சார்ந்து எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி