பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் ரூ. 82,000 உதவித் தொகை பெறுவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2024

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் ரூ. 82,000 உதவித் தொகை பெறுவது எப்படி?

பிரதமர் உயர்கல்வி ஊக்கத் தொகை(பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 82,000 வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது.


ஏழ்மை காரணமாக ஒரு மாணவர்/மாணவியருக்கு உயர்க் கல்வி மறுக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்குகிறது.

தகுதியுள்ள மாணவ/மாணவிகள்


குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.


18 முதல் 25 வயதுடைய மாணவ/ மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.


தொலைதூர கல்வி முறையில் பயின்றவர்கள் ஊக்கத்தொகைக்கு தகுதியில்லை.


வருமான வரிச் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.


12ஆம் வகுப்பு முடித்து இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த(3+2 ஆண்டுகள்) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே தகுதி பெறுவர்.


தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கபட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.


மத்திய மற்றும் மாநில அரசின் வேறெந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழும் பயன்பெறுபவராக இருக்கக் கூடாது.


இடை நிற்கும் மாணவர்கள் அல்லது கல்வி நிறுவனத்தால் நீக்கம் செய்யப்படும் மாணவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை நிறுத்தப்படும்.


ஒவ்வொரு ஆண்டுத் தேர்விலும் 50 சதவிகித மதிப்பெண்ணும் குறைந்தபட்சம் 75 சதவிகித வருகை பதிவேடும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி