ஆன்லைனில் ஜனவரி பருவத்துக்கான மாணவர் சேர்க்கை: இக்னோ பல்கலை. அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2024

ஆன்லைனில் ஜனவரி பருவத்துக்கான மாணவர் சேர்க்கை: இக்னோ பல்கலை. அறிவிப்பு

 

2025 ஜனவரி பருவத்துக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெற்று வருவதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

மத்திய அரசின் இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக கலை, அறிவியல், வணிகம், இதழியல் மற்றும் மக்கள்தொடர்பு, சட்டம், கல்வி, மேலாண்மை, சமூக அறிவியல் பாடங்களில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.


தற்போது 2025 ஜனவரி பருவத்துக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் வழியில் தொடங்கியுள்ளது. இக்னோ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி ஆகும். சேர்க்கை உறுதிசெய்யப்பட்ட பிறகு தகுதியான மாணவர்கள் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in/) உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை (www.ignou.ac.in) பார்க்கலாம். மேலும் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி