கணித திறனறி தேர்வு : 3,333 பள்ளி மாணவர்கள் எழுதினர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2025

கணித திறனறி தேர்வு : 3,333 பள்ளி மாணவர்கள் எழுதினர்

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடந்த கணித திறனறி தேர்வை, 3,333 பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர்.


தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், ஆண்டுதோறும் கணித திறனறி தேர்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.


இந்தாண்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு, கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடந்தது.


இதற்கு, 5 முதல், 8ம் வகுப்பு வரை பயிலும், 3,867 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர். 80 ஒரு மதிப்பெண் வினாக்கள் அடங்கிய தேர்வை, 3,333 பேர் எழுதினர்.


மதிப்பெண் அடிப்படையில், 5ம் வகுப்பில் முதல், 26 பேர் உட்பட, 6, 7, 8 என ஒவ்வொரு பிரிவிலும் சேர்த்து, 104 பேருக்கு ரொக்க பரிசு வழங்கப்படவுள்ளது.


அதாவது, ரூ.2,000, ரூ.1,500, ரூ.500, ரூ.250 என மொத்தம் ரூ.70 ஆயிரம் ரூபாய் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தேர்வு முடிவுகள், பிப்., இரண்டாவது வாரம் வெளியிடப்படும் என, மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி