நாடு முழுவதும் அமைந்துள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2025-26-ம் கல்வியாண்டில் 6, 9-ம்வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவானது கடந்த டிச. 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.650-ம், இதர பிரிவினர் ரூ.800-ம் இணையவழியில் ஜன. 24-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட விவரங்களை என்டிஏ வலைத்தளத்தில் (www.nta.ac.in) அறியலாம். சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி அல்லது aissee@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி