பிஆர்க் படிப்புக்கான ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2025

பிஆர்க் படிப்புக்கான ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு

 

பிஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்பு​களுக்கான ஜேஇஇ முதன்​மைத் தேர்​வில் 2 மாணவர்கள் முழு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்ளனர்.


நம் நாட்​டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்பு​களில் சேர ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்​டும். இவை ஜேஇஇ முதன்​மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவு​களாக நடைபெறும்.


இதில் முதன்​மைத் தேர்​வானது தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) சார்​பில் ஆண்டு​தோறும் 2 கட்டங்​களாக நடத்​தப்​பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி​யாண்​டுக்கான ஜேஇஇ முதல்​கட்ட முதன்​மைத் தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது.


இதில் பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்பு​களுக்கான 2-ம் தாள் தேர்வு ஜன.30-ம் தேதி நடைபெற்​றது. அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்​தினம் வெளி​யானது. மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்​தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்​ளலாம்.


இத்தேர்​வில் மகாராஷ்டிரா மாநில மாணவர் பேட்னி நீல் சந்தேஷ் (பி.ஆர்க்), மத்திய பிர தேசத்​தைச் சேர்ந்த சுனிதி சிங் (பி.பிளானிங்) ஆகியோர் தேசிய அளவில் முழு மதிப்​பெண் பெற்ற சாதனை படைத்​துள்ளனர்.


தமிழகத்​தைப் பொறுத்​தவரை மாணவி ஜி.அ​திதி (பி.ஆர்க்) 99.98 சதவீத​மும், மாணவர் ராகுல் கண்ணன் (பி.பிளானிங்) 99.83 சதவீத​மும் மதிப்​பெண் எடுத்து முன்னிலை வகிக்​கின்​றனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்​தில் அறிய​லாம் என்று என்டிஏ தெரி​வித்​துள்ளது. ஜேஇஇ 2-ம் கட்ட ​முதன்​மைத் தேர்வு ஏப்​ரல் 1 ​முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி