அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பணியாற்றும் 1,500 ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
Mar 23, 2025
தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பாதுகாப்பின்றி பணியாற்றி வரும் 1,500 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கருதி, ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் அறிவிப்பை தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்க வேண்டும் என அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அக்கூட்டமைப்பினர் முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுத்ததால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு வழங்க மறுத்த ரூ.2,152 கோடியை தமிழக அரசின் சொந்த நிதியிலிருந்து ஒதுக்கி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்துள்ள முதல்வரை பாராட்டுகிறோம்.
தமிழகத்தில் முதன்முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்பாகவே நிரந்தரப் பணியிடங்களில் 2012 நவம்பர் 16 வரை பணியேற்ற அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் 1,500 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் 14 ஆண்டுகளாக கேள்விக்குறியாகி உள்ளது.
ஆனால், அதே காலகட்டத்தில் பணியேற்ற அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டுடன், உச்ச நீதிமன்ற வழக்கை தமிழக அரசு கடந்த வாரம் திரும்பப் பெற்றதை வரவேற்கிறோம்.
அதே காலகட்டத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனையுடன் பணிபுரியும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்ததை வரவேற்கிறோம்.
மேலும், பதவி உயர்விற்கும் தகுதித் தேர்வு நிபந்தனையை நீக்க, உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசின் ஆதரவு நிலைப்பாட்டை வரவேற்கிறோம். எனவே, ஒரே பிரச்சினையில், மூன்று வித நிலைப்பாட்டில் மூன்று சாராரையும் தமிழக அரசு காப்பாற்றி உள்ளது.
ஆனால், அதே பிரச்சினையில் சிக்கி, தற்போது வரை அரசால் கண்டுகொள்ளாத நிலையில், அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளாக பாதுகாப்பின்றி பணிபுரியும் 1,500 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கருதி, தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒரு தவிர்ப்பாணை வெளியிட்டு முதல்வர் காப்பாற்ற வேண்டும்.
தற்போது நடந்துவரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
13 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Ellarukum eligibility test la irundhu vilakku venumna appo yarukudhaan andha exam conduct panranga government
ReplyDeleteசரிங்க கவர்னர் சார்
DeleteTet pass than ore vali padinga
ReplyDeleteசரிங்க கலெக்டர் சார்
Delete14 years tet pass panna mudiyala yenna polappu ithu
ReplyDeleteநாய் பொழப்புங்க ஜட்ஜ் அய்யா
DeleteI was studied dted 1999-2001 but did not get the teacher posting till now due to reason district seniority and tet pass 2013 and 2017. Now did not get teacher post. Athan en athangam.
ReplyDeleteKandipa Nalladhu Nadakum...Nambikayodu Irukunga.
Delete2025 la pala loosunga Iruku pola
ReplyDeleteOnly chance tet pass panrathuthan ore vali. illavital avaithaithan
ReplyDeleteமுதலில் அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்..... ஆண்டிற்கு இரண்டு முறை தகுதி தேர்வு வைக்க வேண்டும் வைத்தார்கள்??
ReplyDeleteTet exam Two times per year kandippaga vaikanum
Deletepichai kara koottam
ReplyDelete