08.04.2025 - நடைபெற்ற ஜாக்டோ - ஜியோவை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2025

08.04.2025 - நடைபெற்ற ஜாக்டோ - ஜியோவை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள்

 

ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) 

13.03.2025 மீண்டும் ஜாக்டோ - ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூன்று குழுக்களாக சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்ஜெட் நிதிநிலை அறிக்கையில் எங்களது கோரிக்கைகள் குறித்து உதாரணமாக , பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , சரண் விடுப்பை மீண்டும் அமல்படுத்துவது , தொகுப்பூதிய ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரைமுறைப்படுத்துவது.


 ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் , ஊதிய முரண்பாடுகளை களைவது மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி நம்பிக்கை அளித்தார் . ஆகவே நடப்பு பட்ஜெட்டில் 12 லட்சம் அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம் . ஆனால் 2025-2026 பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது . எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது.


ஆகவே 14.03.2025 நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப் பணியாளர்களின் உணர்வு மட்டத்தை அறிந்து 23.03.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடவடிக்கைக்கு செல்வதென முடிவாற்றப்பட்டது . அப்போராட்டத்தில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் . அரசுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேலாக எழுச்சிகரமாக பங்கேற்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அதனடிப்படையில் இன்று ( 08.04.2025 ) நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.




1 comment:

  1. பெட்டி வாங்காமல் இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி