சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் பட்ட படிப்பு: பிளஸ் 2 தேறியவர்கள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2025

சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் பட்ட படிப்பு: பிளஸ் 2 தேறியவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த எம்.ஏ தமிழ் 5 ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:


சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (Integrated M.A. Tamil) வழங்கப்பட்டு வருகிறது. இந்த பட்டத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.


இதற்கான விண்ணப்ப படிவம், வழிகாட்டி கையேட்டை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, நேரிலும் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன், ‘இயக்குநர், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 2-வது முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்ன 600113’ என்ற முகவரியில் ஜூன் மாதம் 27-ம் தேதிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.


ரூ.2 ஆயிரம் உதவித் தொகை: இப்படிப்பில் சேரும் மாணவர்களில், தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச விடுதி உள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட இணையதளத்திலும் விரிவாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி