அரசு கலை - அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் மே 30-ல் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2025

அரசு கலை - அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் மே 30-ல் வெளியீடு!

 

அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் 2025-2026-ம் கல்வி ஆண்டில் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி இன்றுடன் (மே 27) முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் மாணவிகள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 619 பேர். மாணவர்கள் 76 ஆயிரத்து 65 பேர். மூன்றாம் பாலினத்தவர் 78 பேர்.


விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 762 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் மே 29-ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதியும் அரசு கல்லூரிகளில் வெளியிடப்படும், இந்த பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்படுவதுடன் கல்லூரி இணை்யதளத்திலும் வெளியிடப்படும்.


மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 3-ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 முதல் 14-ம் தேதி வரையும் நடைபெறும். கலந்தாய்வு தொடர்பான தகவல் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அந்தந்த கல்லூரிகளில் இருந்து அனுப்பப்படும்.


மே 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வெழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் மே 30-ம் தேதி தொடங்கும். மாணவர் சேர்க்கை பணிகள் முடிவடைந்து முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூன் 30-ம் தேதி ஆரம்பமாகும்,” என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி