பி.ஹெச்டி படிப்புக்கு வரும் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் இன்று (மே 7) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாரதியார் பல்கலைக்கழக துறைகளிலும், கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் உள்ள பி.ஹெச்டி பகுதி நேரம் மற்றும் முழு நேரம் ஆராய்ச்சிப் பட்டப்படிப்புக்கு 2025-26-ம் கல்வியாண்டுக்கான பொது நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 6-ம் தேதி நடைபெற உள்ளது.
காலை 11 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு வரும் 9-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் போர்ட்டல் (https://fms.b-u.ac.in/cet) மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி