இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று மதியம் நடைபெற்றது. இதற்கிடையே இன்று காலையில் டெலிகிராம், வாட்ஸ்-அப் உள்பட பல்வேறு சமூக ஊடகங்களில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக புகைப்படத்துடன் கூடிய தகவல் பரவியது.
இந்த நிலையில், தேர்வு தொடங்கும் முன்பே சமூக வலைத்தளங்களில் பரவிய வினாத்தாள் போலியானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "சமூக வலைத்தளங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான புகைப்படம் போலியானது.
நீட் தேர்வினை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நீட் தேர்வு நடக்கும் அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை செய்யப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக பரவும் வதந்தியை யாரும் நம்பவேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி