கடந்த 13.06.2025 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும் , அரசியல் கட்சித்தலைவருமான திரு.விஜய் அவர்களை சந்தித்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக்கொள்கிறோம் . கடந்த 13.06.2025 அன்று நடிகரும் , தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான திரு.விஜய் அவர்களை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு.மாயவன் அவர்கள் சந்தித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பேசிய செய்தி என்பது ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தித்துப்பேசியதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு ஜாக்டோ - ஜியோ சார்பில் மறுப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜாக்டொ - ஜியோ அமைப்பு தமிழ்நாட்டில் அரசு ஊழியர் , ஆசிரியர் அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடிவருகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பேரமைப்பாகும். அப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக எந்த ஆட்சியாக இருந்தாலும் சமரசமற்ற முறையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஊதிய மாற்றம் , பறிக்கப்பட்ட உரிமைகள் மீளப் பெறப்பட்டது உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது.
இன்றைக்கும் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மத்திய , மாநில அரசுகளிடம் தொடர்ந்து போராடி வருகிறது . இன்றைக்கும் தமிழ்நாடு அரசிடம் ஜாக்டோ - ஜியோ சார்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் , பல்வேறு கட்ட போராட்ட நடவடிக்கைகள் விளைவாகவும் அரசிடமிருந்து சரண்டர் , மகப்பேறு விடுப்பு பணிவரன்முறைக்கு சேர்ப்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகள் பெற்றுள்ளோம் . மேலும் , பழைய ஓய்வூதியத்திற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை 30.09.2025 க்குள் பெறப்படும் என உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே , அரசிடமிருந்து நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளோம் . ஜாக்டோ - ஜியோ பேரமைப்பு அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப்பணியாளர் அமைப்புகள் சார்பாக பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பாகும். இதில் பங்கேற்றுள்ள அந்தந்த சங்கங்களின் மாநில அமைப்புகளின் முடிவுகளுக்கேற்ப தனித்துவமாக செயல்படுவது அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட முடிவாகும் . அதற்கும் ஜாக்டோ - ஜியோவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை . எனவே , ஜாக்டோஜியோ சார்பாக மேற்கண்ட நடிகர் மற்றும் சங்கத்தலைவர் அவர்களை சந்தித்ததாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது.
அதற்கும் ஜாக்டோ- ஜியோவிற்கும் எவ்வித சம்பந்ததமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் . எனவே பத்திரிக்கைகளில் இச்செய்தியை திரும்பப்பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
அவர் பெட்டி வாங்கி விட்டார்,இவர் வாங்க வில்லை அதுதான் பிரச்சனை
ReplyDeleteநாடகம்
ReplyDeleteசங்கத்தை களைந்து விட்டு வீட்டுக்கு போய் ஒய்வு எடுங்கள் எல்லாலம் தன்னால் நல்லது நடக்கும்
ReplyDelete👍
Delete