அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று (ஜூன் 30) முதல் திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 7 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்க 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.முதல்கட்டமாக சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வும், தொடர்ந்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வும் நிறைவடைந்தது.
இதையடுத்து, அரசுக் கல்லூரிகளில் முதல்கட்ட கலந்தாய்வின்போது நிரம்பாத இடங்களை நிரப்புவதற்கான 2-ம்கட்ட சேர்க்கைப் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 30-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக்கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது.
அதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று(ஜூன் 30) தொடங்கப்பட உள்ளன. இதையடுத்து மாணவர்களை வரவேற்க அரசுக் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மேலும், ராகிங் போன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி