பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. இதில் 16 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
நடப்பு கல்வி ஆண்டில் (2025-26), பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் இறுதி சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்த மாணவர்களுக்கு இன்று (20-ம் தேதி) இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே, பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க தவறிய மாணவர்கள் ஆகியோருக்கான துணை கலந்தாய்வு நாளை (21-ம் தேதி)தொடங்கி 23-ம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. இதற்கு 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பி்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை கலந்தாய்வு முடிவடைந்த பிறகு, பொறியியல் படிப்பில் எஸ்சி அருந்ததியர் ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களில், எஸ்சி மாணவர்கள் சேருவதற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 25, 26-ம் தேதி நடைபெறும். 26-ம் தேதியுடன் ஒட்டு மொத்த கலந்தாய்வு பணிகள் முடிக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி