பொறியியல் துணை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது: 16 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2025

பொறியியல் துணை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது: 16 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

 பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான துணை கலந்​தாய்வு நாளை தொடங்​கு​கிறது. இதில் 16 ஆயிரம் மாணவர்​கள் பங்​கேற்​கின்​றனர்.


நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26), பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்​வின் இறுதி சுற்று தற்​போது நடை​பெற்று வரு​கிறது. இதில் கலந்​து கொண்டு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணையை உறுதி செய்த மாணவர்​களுக்கு இன்று (20-ம் தேதி) இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்பட உள்​ளது.


இதற்​கிடையே, பிளஸ் 2 துணை தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​கள், பொது கலந்​தாய்​வில் பங்​கேற்க தவறிய மாணவர்​கள் ஆகியோ​ருக்​கான துணை கலந்​தாய்வு நாளை (21-ம் தேதி)தொடங்கி 23-ம் தேதி வரை இணை​ய​வழி​யில் நடை​பெறுகிறது. இதற்கு 16 ஆயிரம் மாணவர்​கள் விண்​ணப்​பி்த்​துள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


துணை கலந்​தாய்வு முடிவடைந்த பிறகு, பொறி​யியல் படிப்​பில் எஸ்சி அருந்​த​தி​யர் ஒதுக்​கீட்​டில் உள்ள காலி​யிடங்​களில், எஸ்சி மாணவர்​கள் சேரு​வதற்​கான சிறப்பு கலந்​தாய்வு வரும் 25, 26-ம் தேதி நடை​பெறும். 26-ம் தேதி​யுடன் ஒட்டு மொத்த கலந்​தாய்வு பணி​கள்​ முடிக்​கப்​படும்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி