தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை, அத்தியாவசிய தேவைகளுக்கு 100 சதவீதம் எடுக்கும் வகையில் விதிமுறைகளை எளிதாக்கி உள்ளது மத்திய அரசு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பின் 238-வது மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் பிஎப் பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளை எளிதாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, மருத்துவம், கல்வி, திருமணம், வீடு மற்றும் சிறப்பு சூழ்நிலைகள் என அத்தியாவசிய தேவைகளுக்கு இனிமேல் தொழிலாளர்கள் தங்கள் பிஎப் பணத்தில் 100 சதவீதத்தையும் திரும்ப பெறலாம். இது 7 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பாதுகாப்பதோடு, தங்கள் சேமிப்பை எளிதாக அணுகவும் முடியும்.
முன்னதாக பிஎப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு 13 வகையான விதிமுறைகளை வைத்திருந்தது. தற்போது அவை எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ஒரு பிரிவின் கீழ் பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறையை அறிவித்துள்ளது. இது தொழிலாளர்கள் எளிதாக புரிந்து கொள்ளவும், பணத்தை எளிதாக திரும்பப் பெறவும் வழிவகுக்கும். திருமணம், கல்வி செலவுக்கு 3 முறை மட்டுமே பிஎப் சேமிப்பில் இருந்து பணத்தைப் பெற முடியும். தற்போது, கல்விக்கு 10 முறை வரையிலும், திருமணத்துக்கு 5 முறை வரையிலும் பணம் எடுக்க முடியும்.
இனிமேல் தொழிலாளர்கள் தங்களுடைய சேமிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு தொகையையும் சேர்த்து தகுதிக்கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடியும். மேலும், பிஎப் சேமிப்பில் இருந்து சிறிதளவு பணம் எடுப்பதற்கான குறைந்தபட்ச பணிக் காலம் 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறப்பு சூழ்நிலைகளின் கீழ் பணத்தை திரும்பப் பெற, காரணங்களை தெரிவிக்க வேண்டியதில்லை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி