Salary Account Insurance - விபத்தில் மரணம் அடைந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2025

Salary Account Insurance - விபத்தில் மரணம் அடைந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது!!!


Salary Account Insurance 
கடலூர் செல்லங்குப்பம் பன்னீர்செல்வம் மகன் கஜா என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை உளுந்தூர்பேட்டையில் காவலராக பணியாற்றி வந்தவர், அரியலூர் அருகே வாகன விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் கஜா பாரத ஸ்டேட் வங்கியில் போலீஸ் சேலரி பேக்கேஜ் (PSP) அக்கவுண்ட் வைத்திருந்ததார். போலீஸ் சேலரி பேக்கேஜ் வைத்திருக்கும் காவலர் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி இன்சூரன்ஸ் தொகை அவரது குடும்பத்தாருக்கு வழங்கி வருகிறார்கள். வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழந்த கஜா அவரது தந்தை பன்னீர்செல்வம், அவரது மனைவி பிரவீனா வயது 28, மகன் அதியன் வயது 2 1/2 குடும்பத்தாரிடம் ரூபாய் 1 கோடி காசோலையை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் வழங்கினார். பாரத ஸ்டேட் வங்கி வங்கியின் மண்டல மேலாளர் திரு. நட்ராஜ் , தலைமை மேலாளர் திரு. பரணிதரன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி