2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு - விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் - TRB - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2025

2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு - விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் - TRB


Direct Recruitment for the Posts of Assistant Professors in the Tamil Nadu Collegiate Educational Service for Government Arts and Science Colleges and Government Colleges of Education – Press Release - Edit Option for Online Application.. 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் , 04 / 2025 , நாள் . 16.10.2025 அன்று வெளியிடப்பட்டு , விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 10.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . தொடர்ந்து , விண்ணப்பதாரர்களின் பணிஅனுபவ சான்றிதழ் உள்ளீடு செய்வதற்கு ஏற்கனவே 28.10.2025 அன்று வெளியிடப்பட்ட Addendum 04.B / 2025 ன்படி 30.11.2025 க்குள் பணிஅனுபவ சான்றிதழ்களை மட்டும் உள்ளீடு செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இந்நிலையில் , அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் வழங்கியதின் அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகள் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள விரும்பினால் 111.2025 முதல் 13.11.2025 வரை திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது . 13.11.2025 முதல் தேர்வர்களின் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கும் . 13.11.2025 க்கு பிறகு மாற்றங்கள் கோரி வரப்பெறும் கோரிக்கைகள் பரிசீலிக்க இயலாது . மேலும் , விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் ( Edit Option ) மேற்கொள்ளும்போது கீழ்காணும் வழிமுறைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.


Edit Option - TRB Press News - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி