புதிய வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2025

புதிய வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

மாநில கல்விக் கொள்கை அடிப்​படையி​லான புதிய வரைவு பாடத்திட்​டம் டிசம்​பரில் தயா​ராகும் என பள்​ளிக்​கல்​வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார்.


தமிழ்​நாடு மாநிலக் கல்விக் கொள்​கை 2025-ன்​படி, தற்​போதைய பாடத்​திட்​டங்​களை மாற்​றியமைத்து புதிய பாடத்​திட்​டங்​களை உரு​வாக்க, அமைச்சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் உயர்​நிலைக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் உட்பட 13 பேர் உள்​ளனர்.


அதே​போல, பள்​ளிக்கல்விக்கு புதிய கலைத்​திட்​டத்தை வடிவ​மைக்க சுற்​றுச்​சூழல் விஞ்​ஞானி சுல்​தான் அகமது இஸ்​மா​யில் தலை​மை​யில் பாடத்​திட்ட வடிவ​மைப்​புக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில், பஞ்​சாப் மொஹாலி இந்​திய அறி​வியல் கல்​வி, ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன், வரலாறு மற்​றும் தொல்​லியல் வல்​லுநர் கா.​ராஜன் உட்பட 14 பேர் உள்​ளனர்.


இந்​நிலை​யில், உயர்​நிலைக் குழு, கலைத்திட்ட வடிவ​மைப்​புக் குழு ஆலோ​சனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்​றது. அமைச்​சர் தலைமை வகித்தார். உயர்​நிலைக் குழு துணைத் தலை​வ​ரான பள்​ளிக்​கல்​வித்துறை செயலர் பி.சந்​திரமோகன் மற்​றும் நிதித் துறை செயலர் உதயச்​சந்​திரன், கலைத்திட்ட வடிவ​மைப்​புக் குழு தலைவர் சுல்​தான் அகமது இஸ்மா​யில், இஸ்ரோ தலை​வர் நாராயணன், மாநில திட்​டக்​குழு உறுப்​பினரும், மாதிரிப் பள்​ளி​கள் உறுப்​பினர் - செயலரு​மான இரா.சுதன், பள்​ளிக்​கல்வி இயக்​குநர் கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ், மாநில கல்​வி​யியல் ஆராய்ச்​சி, பயிற்சி நிறுவன இயக்​குநர் லதா மற்​றும் உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர்.


விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன், இந்​திய கணித அறிவியல் நிறுவன முன்​னாள் பேராசிரியர் இரா.​ரா​மானுஜம், அமெரிக்​க கலி​போர்​னியா பல்​கலைக்​கழக மூலக்​கூறு வரைகலை, கணக்​கீட்டு வளமைய இயக்​குநர் விஞ்​ஞானி ஏ.இ​ரா.அழகியசிங்​கம், கிரிக்​கெட் வீரர் ரவிச்சந்​திரன் அஸ்​வின் ஆகியோர் இணைய வழி யாக பங்​கேற்​றனர்.


கூட்​டத்​துக்​குப் பிறகு, செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் அன்பில் மகேஸ் கூறிய​தாவது: மாணவர்​களுக்கு தியரியை​விட செய்​முறை பாடம் அதி​கம் இருக்க வேண்​டும் என்​பதே பலரது விருப்​ப​மாக உள்​ளது. மாணவர்​கள் வெறுமனே பாடங்​களை மனப்​பாடம் செய்​யாமல், நன்கு புரிந்து படித்​திருக்​கிறார்​களா என்​பதை உறு​திப்​படுத்​தும் வகை​யில் மதிப்​பீடு அமைய வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தி​ உள்​ளனர்.


புதிய பாடத்​திட்​டத்தை ஒன்றாக செயல்​படுத்​தாமல், முதலில் 1, 2, 3-ம் வகுப்​பு​கள், அடுத்து 4 முதல் 10, பின்​னர் பிளஸ் 1, பிளஸ் 2 என படிப்​படி​யாக அமல்படுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அடுத்த 10 ஆண்​டு​கால வளர்ச்​சி, ஏஐ உள்​ளிட்ட வளர்ந்து வரும் தொழில்​நுட்ப வளர்ச்​சிகளை எதிர்​கொள்​ளும் வகை​யில் புதிய பாடத்​திட்​டம் உரு​வாக்​கப்​படும். இதற்​கான வரைவு பாடத்​திட்​டம் டிசம்​பரில் தயா​ராகும். இவ்​வாறு கூறி​னார்.


இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறும்​போது, “புதிய பாடத்திட்​டத்தை உருவாக்க தமிழக அரசு எடுத்​துள்ள முயற்சி பாராட்​டுக்​குரியது. மாணவர்​கள் படிப்​பில் மட்​டுன்றி கலை, விளையாட்​டு, வாழ்​வியல் திறன், தகவல் தொடர்​புத் திறன், விருந்​தோம்பல், சகிப்​புத்​தன்மை என அனைத்​தி​லும் சிறந்து விளங்​கும் கல்வி வேண்​டும்” என்​றார்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி