TRUST EXAM : நாளை ஊரக திறனாய்வுத் தேர்வு: தேர்வுத் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2025

TRUST EXAM : நாளை ஊரக திறனாய்வுத் தேர்வு: தேர்வுத் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஊரக திற​னாய்​வுத் தேர்வு நாளை (நவ.29) நடை​பெறவுள்ள நிலை​யில், முதன்மை மற்​றும் தேர்வு அறைக் கண்​காணிப்​பாளர்​களுக்​கான வழி​காட்​டு​தல்​களை தேர்​வுத் துறை வெளி​யிட்​டுள்​ளது.


தமிழகத்​தில் கிராமப்​புற மாணவர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக ஊரக திற​னாய்வு தேர்வு திட்​டத்​தின் கீழ் கல்வி உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி, பள்​ளி​களில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்​கள் இந்த திற​னாய்வு தேர்​வெழுத தகுதி பெற்​றவர்​களாவர்.


இந்த திட்​டத்​தின் மூலம் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தலா 50 மாணவர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு ஆண்​டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்​டு​களுக்கு வழங்​கப்​படும். நடப்​பாண்​டுக்​கான ஊரகத் திற​னாய்வு தேர்வு நாளை (நவ.29) காலை 10 முதல் மதி​யம் 12.30 மணிவரை நடை​பெற உள்​ளது.


இதற்​கான முன்​னேற்​பாடு​கள் தேர்​வுத் துறை​யால் தற்​போது மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. தேர்வு அறை கண்​காணிப்​பாளர்​கள் காலை 9.30 மணிக்கு தங்​களுக்​கான தேர்வு அறைக்​குச் செல்ல வேண்​டும். ஒவ்​வொரு தேர்வு அறை​யிலும் 20 பேர் மட்​டுமே தேர்​வெழுத ஏற்​பாடு செய்ய வேண்​டும்.


ஹால் டிக்​கெட் மற்​றும் பெயர் பட்​டியலில் இடம் பெற்​றுள்ள மாணவர்​களை ஒப்​பிட்​டுப் பார்த்து தேர்​வுக்கு அனு​ம​திக்க வேண்​டும். தேர்​வர்​கள் எக்​காரணத்​தைக் கொண்​டும் வினாத்​தாள் புத்​தகத்​தில் விடைகளை குறிக்க வேண்​டாம் என அறி​வுறுத்த வேண்​டும் என்பன உட்​பட பல்​வேறு வழி​காட்​டு​தல்​களை தேர்​வுத்​ துறை வழங்​கி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி