தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ”ஜவஹர் நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றபடுகிறது. ஆனால் தமிழக அரசு இருமொழி கொள்கையை சட்டமாக்கியுள்ளது” என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ”ஜவஹர் நவோதயா பள்ளிகள் விவகாரத்தை மொழிப் பிரச்சனையாக மாற்றக் கூடாது. நாம் கூட்டாட்சி அமைப்பில் வாழ்கிறோம். குடியரசின் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளது. ஓரடி முன்னேறினால், மத்திய அரசும் ஓரடி முன்னால் வரும்.
ஜவஹர் நவோதயா பள்ளிகளை திணிப்பாக பார்க்காமல், மாநில மாணவர்களுக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும். மாநில அரசின் மொழிக் கொள்கை இதுதான் என்று மத்திய அரசிடம் கூறுங்கள், அது குறித்து ஆலோசனை நடத்துங்கள்” என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி