விடுமுறை நாட்களில் NSS சிறப்பு முகாம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2025

விடுமுறை நாட்களில் NSS சிறப்பு முகாம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் பணியாற்றியமைக்காக ஈடுசெய்யும் விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது . பள்ளிக் கல்வி நாட்டு நலப்பணித்திட்டம் 2025-2026ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள் காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையில் 7 நாட்கள் நடைபெறும் மாணவர்களுக்கான சிறப்பு முகாமில் அனைத்து மாவட்ட தொடர்பு அலுவலர்களும் ( DLO's ) மற்றும் திட்ட அலுவலர்கள் ( PO's ) இவ்விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக ஆறு நாட்கள் வருகைபுரிந்து பணியாற்றிருந்தால் மட்டும் ஈடு செய்யும் விடுப்பு அனுமதிக்கலாம். 

மேலும் இவ்விடுப்பினை மொத்தமாக எடுக்காமல் அவ்வப்போது ஒரு நாள் வீதம் விதிகளின்படி 6 மாத கால அவகாசத்திற்குள் எடுக்க வேண்டுமென்றும் இது சார்ந்த ஈடுசெய் விடுப்பு ஏற்கனவே துய்க்கப்பட்டிருந்தால் அவ்விடுப்பு போக மீதமுள்ள நாட்களுக்கு மட்டும் விடுப்பு வழங்குமாறும் , அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி