ரயில் ஒன் செயலியில் 3% தள்ளுபடி பெறும் திட்டம் அமலுக்கு வந்தது தொடர்பாக...
ரயில் ஒன் செயலியில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளைப் பெறும் பயணிகளுக்கு 3 சதவீதம் தள்ளுபடி பெறும் திட்டம் இன்று(ஜன. 14) முதல் அமலுக்கு வந்தது.
பொதுமக்களிடையே எண்ம (டிஜிட்டல்) பயணச்சீட்டு முறையை ஊக்குவிக்கும் வகையில் ரயில் ஒன் செயலியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில், முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள், முன்பதிவுள்ள பயணச் சீட்டுகள், நடைமேடை பயணச் சீட்டுகள் என அனைத்து வகை பயணச் சீட்டுகளையும் பெறும் வசதி உள்ளது. அத்துடன் ஐஆர்சிடிசி ரயில் கனக்ட், என்டிஇஎஸ், யுடிஎஸ் ஆன் மொபைல், ரயில் மதாத், ஃபுட் ஆன் டிராக் ஆகிய சேவைகளைப் பெறும் ஒருங்கிணைந்த செயலியாகவும் உள்ளது.
இந்த நிலையில், தற்போது ரயில் ஒன் சேவை மூலம் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பயணக் கட்டணச் சீட்டை முன்னதாக பதிவு செய்து பெறுவோருக்கு 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதற்காக ரயில் ஒன் செயலி தளத்தில் யுபிஐ, டெபிட் கார்டுகள், நெட்பேங்கிங் போன்ற எண்ம (டிஜிட்டல்) கட்டண முறைகளைப் பயன்படுத்தி முன்பதிவு செய்தால் தள்ளுபடி சலுகையைப் பெறலாம். ஆர்-வால்ட் மூலம் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் பணிகளுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 சதவீத போனஸ் கேஷ் பேக் சலுகை எந்தவித மாற்றமின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தத் தள்ளுபடி திட்டமானது இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் ஜூலை 14- ஆம் தேதி வரையில் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி