உத்தர பிரதேச மாநில பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளைத் தொடங்க திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2026

உத்தர பிரதேச மாநில பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளைத் தொடங்க திட்டம்


உத்தர பிரதேசத்​தின் பள்​ளி​கள், கல்​லூரி​களில் தமிழ் பாட வகுப்​பு​களை தொடங்க அந்த மாநில அரசு திட்​ட​மிட்டு உள்ளது.

உத்தர பிரதேசத்​தின் வாராணசி​யில் கடந்த டிசம்​பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தமிழ் கற்​கலாம் என்ற கருப்​பொருளு​டன் காசி தமிழ்ச் சங்​கமம் 4.0 நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் முதல்​வர் ஆதித்​ய​நாத் பேசும்​போது, “உத்தர பிரதேச பாடத்​திட்​டத்​தில் தமிழ் உள்​ளிட்ட தென்​னிந்​திய மொழிகள் சேர்க்​கப்​படும்” என்று தெரிவித்தார்.

கடந்த டிசம்​பர் 28-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசும்​போது, “காசி தமிழ்ச் சங்​கமத்​தின் ஒரு பகு​தி​யாக வாராணசி​யின் குயீன் கல்​லூரியைச் சேர்ந்த மாணவி பாயல் படேல் தமிழ் மொழியை கற்று வரு​கிறார். வாராணசி​யின் 50-க்கும் மேற்​பட்ட பள்​ளி​களில் தமிழ் கற்​கலாம் என்ற சிறப்பு இயக்கம் நடத்தப்​பட்​டது. பிஜி தீவு முதல் காசி வரை மக்​களின் மனங்​களை தமிழ் ஒன்​றிணைக்​கிறது” என்று தெரி​வித்​தார்.


உ.பி. அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “பிரதமர் மோடி, முதல்​வர் ஆதித்​ய​நாத்​தின் முயற்​சி​யால் உ.பி. பள்​ளி​கள், கல்​லூரி​களில் தமிழ் பாட வகுப்​பு​களை தொடங்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. முதல் ​கட்​ட​மாக வாரணாசி பள்​ளி, கல்​லூரி​களில் தமிழ் வகுப்புகள் தொடங்​கப்​பட்டு வரு​கின்​றன. மேலும் வாரணாசியை சேர்ந்த 50 ஆசிரியர்​கள் தமிழகம் சென்று இந்தி பாட வகுப்புகளை நடத்த உள்​ளனர்” என்று தெரி​வித்​தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி