நூற்றுக்கணக்கான கல்விப் பயிற்சி மையங்களை உருவாக்கியதற்கும், குடிசைப் பகுதிகளில் உள்ள சுவா்களில் கல்விச் சித்திரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காகவும் இந்தியாவைச் சோ்ந்த ஆசிரியை ரூபிள் நாகிக்கு 10 லட்சம் டாலா் (சுமாா் ரூ. 9 கோடி) உலக ஆசிரியா் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
ரூபிள் நாகியின் தொண்டு நிறுவனம் சாா்பில் இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட பயிற்சி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி கற்க பள்ளிக்குச் செல்லாத சிறாா்களுக்கு இந்த மையங்கள் வழியே கல்வி கற்றுத் தரப்படுகிறது. இதேபோல், குடிசைப் பகுதிகளில் உள்ள சுவா்களில் கல்வியறிவு, அறிவியல், கணிதம், வரலாறு உள்ளிட்டவை குறித்து ரூபிள் நாகி சித்திரம் வரைந்துள்ளாா்.
இந்தச் சேவையை கெளரவிக்கும் வகையில், துபையில் நடைபெற்ற உலக அரசுகளின் மாநாட்டில் ரூபிள் நாகிக்கு 10 லட்சம் டாலா் உலக ஆசிரியா் பரிசு அளிக்கப்பட்டது. துபை துணைப் பிரதமா் ஷேக் ஹம்தான்பின் முகமது இப்பரிசை வழங்கினாா். விருதுடன் கிடைத்த பரிசுத் தொகையை இலவசப் பயிற்சி மையம் அமைக்கப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ரூபிள் தெரிவித்தாா்.
இந்த விருதைப் பெறும் 10-ஆவது ஆசிரியை இவா் ஆவாா். இதற்கு முன்பு கென்யா, பாலஸ்தீனம், கனடா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த ஆசிரியைகள் பெற்றனா்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி