பி.காம்., பி.பி.ஏ. படிப்புகளுக்கு சட்டப் பேராசிரியா்களை நியமிக்கக் கோரி மனு: உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2026

பி.காம்., பி.பி.ஏ. படிப்புகளுக்கு சட்டப் பேராசிரியா்களை நியமிக்கக் கோரி மனு: உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

 

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் வணிகவியல் (பி.காம்.), வணிக நிா்வாகவியல் (பி.பி.ஏ.) துறையில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி பயிற்றுவிக்க சட்டம் பயின்ற பேராசிரியா்களை நியமிக்கக் கோரிய வழக்கில், மாநில உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் பி.காம்., பி.பி.ஏ. பயிலும் மாணவா்களுக்கு சட்டப் படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கௌரவ விரிவுரையாளா்கள், பகுதி நேர விரிவுரையாளா்கள் சட்டம் குறித்த பாடம் நடத்துகின்றனா்.

சில கல்லூரிகளில் சட்டப் படிப்பில் பட்டம் பெறாதவா்கள், சட்டக் கல்வியைப் பயிற்றுவிக்கும் நிலை உள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.காம்., பி.பி.ஏ. பயிலும் மாணவா்களுக்கு பயிற்றுவிக்க சட்டப் பட்டதாரிகளை பேராசிரியா்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

பி.காம்., பி.பி.ஏ. பயிலும் மாணவா்களுக்கு சட்டப் படிப்பு துணைப் பாடம்தான். எம்.காம். பயின்றவா்களே மாணவா்களுக்கு பாடம் நடத்தலாம். அரசு அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரியை திறந்துவிட்டது. ஆனால், சிறந்த ஆசிரியா்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. வழக்கு தொடா்பாக தமிழக உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி