டிஇஓ முதன்மைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி. வெங்கட பிரியா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 1- சி கீழ் வரும் மாவட்ட கல்வி அதிகாரி நேரடி நியமனத்துக்கான முதன்மைத்தேர்வு மார்ச் 22-ம் தேதி முதல் 25-ம்் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை தங்களின் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி