இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள் சோர்ந்துவிடாமல் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
சமூக, பொருளாதார, தனிநபர் காரணங்களுக்காக பள்ளிக்கு வராவிட்டால் உடனே அந்த மாணவரின் வீட்டுக்கே சென்று பள்ளிக்கு வரவைக்க முயற்சி மேற்கொள்வோம். மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடரும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நாம் அடுத்தகட்டத்துக்குச் செல்ல முடியாது. ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் குறித்து நீதிமன்றத்தில் சில வழக்குகள் உள்ளன.இந்த பிரச்சினைக்கு நல்ல வழிபிறக்கும்.
பொதுத் தேர்வுகளில் வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக கல்விப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சியில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களே கடைசி 10 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி