கல்வித்துறையால் நிறைவேற்ற முடியும் அளவில் உள்ள, ஆசிரியர்கள் கோரிக்கைகளை பட்டியலிட்டு அவற்றின் மீது உடன் நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளார். தி.மு.க., ஆட்சியில் நடந்தது போல் இழுத்தடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தி.மு.க., ஆட்சியை தொடர்ந்து த.வெ.க.,விலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்கின்றன. ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் என 120க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் இரண்டு நாட்கள் கலந்துரையாடினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் அமைச்சர் முன் வைக்கப்பட்டன.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சங்கங்கள் வாரியாக பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது, சம்பள முரண்பாடு, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம், போராட்டங்களால் சம்பளம் இழந்த ஆசிரியர்களுக்கு நிவாரணம், ஊக்க ஊதியம் பாதிப்பு, ஆசிரியர் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைளை குறிப்பிட்டனர்.இவற்றில் போராட்டம் காரணமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு 27 நாட்களுக்கான சம்பளம், வழக்குகளை வாபஸ் பெறுவது, ஊக்க ஊதியம் பாதிப்புகளை சரிசெய்வது, 'டெட்' தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் நியமிப்பது போன்ற கோரிக்கைகள் உடன் நிறைவேற்ற கூடியவை; இதை அமைச்சரிடம் விளக்கினோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.கலந்துரையாடலுக்கு பின் கல்வி அதிகாரிகளை சந்தித்தோம். அவர்கள், முடியும் என்ற கோரிக்கைகளை உடன் நிறைவேற்ற முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை குறித்து பட்டியலிடப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி போல் தாமதிக்க வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக நம்பிக்கை அளித்தனர் என்றனர்.
Jul 30, 2026
Home
Kalviseithi today news
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் கிரீன் சிக்னல்; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் கிரீன் சிக்னல்; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
Recommanded News
Tags # Kalviseithi today newsRelated Post:
Kalviseithi today news
Labels:
Kalviseithi today news
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

Pg trb second list podunka
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்களை ஒரு மாதம் சென்னையில் மற்றும் அணைத்து மாவட்டங்களிலும் ஊதிய முரன்பட்டை சரி செய்யாமல் அலைய விட்டது சிறை பிடித்தது , மேலும் ஒரு மாதம் ஊதிய பிடித்தம் செய்த சாதனை முந்தைய ஆட்சியில் அதற்கு துணை போன கல்வி அதிகாரிகள் சிலர் உடனே வேறு துறைக்கு மாற்றவும் கடன் வாங்கி குடும்பம் நடத்திய ஆசிரியர்கள பலர்
ReplyDelete