சட்ட விரோதமாக பணி நியமனம் செய்யப்பட்ட கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர்கள் 54 பேரும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் இன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கோவை மாநகராட்சியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.அதனடிப்படையில் மாநகராட்சியில் பணியாற்றி வந்த 54 இளநிலை உதவியாளர்களை மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா பணி நீக்கம் செய்துள்ளார். 54 பேரும் இன்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Why don't tnpsc take care of all recruitment processes
ReplyDelete