தமிழகத்தில், 113 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பணியிட மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் நேற்று நடந்தது. பணியிட மாறுதல் கேட்டு, 227 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 113 பேர், விரும்பியஇடங்களை தேர்வு செய்தனர்.இதையடுத்து, இவர்கள் அனைவருக்கும், பணியிட மாறுதலுக்கான உத்தரவுகளை, இயக்குனர் ராமேஸ்வர முருகன் வழங்கினார். துறையில், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ளன. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம், 34 பேர் நேரடியாக உதவி தொடக்கக் கல்விஅலுவலர்களாக, தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு,விரைவில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது. மீதியுள்ள இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
Jun 24, 2012
Home
kalviseithi
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் 113 பேருக்கு பணியிட மாறுதல்
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் 113 பேருக்கு பணியிட மாறுதல்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி