ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பதிவு மூப்புஅடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம் உட்பட 13 பாடப் பிரிவுகளில் ஆயிரத்து 80 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஆன்லைன் முறையில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், மாநிலம் முழுவதும் 782 பேருக்கு நேரடியாக பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. வழக்கமாக பணி நியமனம் பெறுவோர், மருத்துவ சான்றிதழ்களைப் கொடுத்து பணியில் சேருவார்கள். தற்போது முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அந்தந்த மாவட்டங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் பணி நியமனம் பெற்றவர்களுக்கான மருத்துவபரிசோதனை ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அரசு மருத்துவர் செந்தில்வேல் 28 ஆசிரியர்களுக்கு, உயரம், எடை, ரத்த அழுத்தம் மற்றும் செவித்திறன், பார்வைத் திறன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையும் செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி