ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணிசெயற்குழு கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2012

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணிசெயற்குழு கூட்டம்

நாமக்கல்லில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில பொருளாளர் மோசஸ் வரவு, செலவு கணக்குளை வாசித்தார்.மாநில பொதுச் செயலாளர் செல்வராசன் பேசினார்.கூட்டததில், ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைந்து,மூன்று நபர் அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, நவம்பர், 7ம் தேதி, மாநிலம் முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில துணைத் தலைவர் மலர்விழி, சந்திரமோகன், மாநிலச் செயலாளர்கள் மணிமேகலை, முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி