உடன்குடியில் பள்ளி ஆசிரியை இடமாற்றம் கிடைக்காததால் விரக்தி அடைந்து அளவிற்கு அதிகமான மாத்திரை தின்று பரிதாபமாக இறந்தார்.உடன்குடியில் சத்யா நகரை சேர்ந்த விஜயசங்கர் இவரது மனைவி முருகேஸ்வரி(40). இவர் ஆசிரியராக வேலூரில் பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு ஜானு என்ற மகளும், மாதேஷ் என்ற மகனும் உள்ளனர். குழந்தைகள் மற்றும் கணவரை பிரிந்து வேலுரில் வேலை பார்ப்பதால் உடன்குடி அருகே தன் வேலையை மாற்றுவதற்காக முயற்சி மேற்கொண்டு வந்தார்.ஆனால் இடமாற்றம் கிடைக்காததால் தசரா திருவிழாவிற்கு வந்த ஆசிரியை குழந்தைகளை விட்டுவிட்டு ஆசிரியர் பணிக்கு போக மனமில்லாததால் சம்பவதன்று இரவில் இவர் பிரஸ்ஸார் மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிருக்கு போராடிய இவரை உடனடியாக தூத்துக்குயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து இவர் கணவர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி