ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி., - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2012

ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி.,

"அடுத்த,ஐந்து ஆண்டுகளில்,ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்' என, டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து,துறை வட்டாரங்கள் கூறியதாவது:டி.இ.டி., தேர்வு வழியாக,தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்படுகின்றனர்.ஆண்டுதோறும்,ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு,ஆசிரியர்
பணியிடங்கள் என,ஆண்டுதோறும்,புதிய ஆசிரியர்
நியமன எண்ணிக்கை,கணிசமாகவ இருக்கும்.பட்டதாரி
ஆசிரியரில், தமிழ்,வரலாறு, அறிவியல் பாடங்களில்
படித்தவர்கள்,எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.
ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு,
தேவை அதிகமாக உள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில்,ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15
ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே,
பி.ஏ., - பி.எட்.,ஆங்கிலம் படிப்பவர்கள், எளிதாக,
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன்,உடனடியாக
வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு,
டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன.கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம்
தரப்படவில்லை.ஆனால்,முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும்,
சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ஆசிரியர் வரை,புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும்
ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின்
எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே,
ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என,
எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி