ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள,
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,அடுத்த மாதம், 7ம் தேதி,கலந்தாய்வு நடக்கிறது.சென்னையில்
நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் உரிய சான்றுகளுடன் ஆஜராக வேண்டுமென
அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில்,2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை
நேரடியாக நிரப்ப,ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்,
ஒதுக்கீடு பெறப்பட்டது.இதன் படி,ஆதிதிராவிடர்
நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட, 47
பேருக்கு, அடுத்த மாதம்,7ம் தேதி, 11:00 மணிக்கு,
சேப்பாக்கம், எழிலக இணைப்பு கட்டடத்தில் உள்ள, ஆதி திராவிடர் நல கமிஷனர் அலுவலகத்தில்,
கலந்தாய்வு நடக்கிறது.அன்று, உரிய சான்றுகளுடன், தவறாமல் ஆஜராக வேண்டும்.இவ்வாறு, செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Nov 30, 2012
உடற்கல்வி ஆசிரியர் பணி கலந்தாய்வு தேதி அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி