பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 10.5 லட்சம் பேர் பங்கேற்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2013

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 10.5 லட்சம் பேர் பங்கேற்பு!

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், மாநிலம் முழுவதும் துவங்கின. இதில், 10.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 27ல் துவங்கி, ஏப்ரல் 12 வரை நடக்கிறது. சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்குவந்ததன் காரணமாக, அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு முன்னதாக, இந்த செய்முறைத் தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும்துவங்கியது.மொத்தம், 25 மதிப்பெண்களுக்கு, செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. மீதமுள்ள, 75 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கும். எழுத்து தேர்வை எழுதும் அனைத்து மாணவ, மாணவியரும், செய்முறைத் தேர்விலும் பங்கேற்கின்றனர். அதன்படி,10.5 லட்சம் மாணவ, மாணவியர், இந்த தேர்வில் பங்கேற்றுள்ளனர்.மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, இம்மாதம், 28ம் தேதிக்குள், செய்முறைத் தேர்வுப் பணிகளை முடித்து, அதன் விவரங்களை, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி