பிளஸ் 2 தத்கால் தேர்வு - கூடுதல் விண்ணப்த்தை பூர்த்திசெய்ய வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2013

பிளஸ் 2 தத்கால் தேர்வு - கூடுதல் விண்ணப்த்தை பூர்த்திசெய்ய வேண்டும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில்,தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என,தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தேர்வுத்துறை அறிவிப்பு: "ஆன்-லைன்" வழியில், ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள், "கன்பார்மேஷன் காப்பி" என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளுடன், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், 50 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி, சுய முகவரியிட்ட கவரினையும், சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்ப எண், 1251000001 முதல், 1251001000 வரையில் உள்ள தேர்வர்கள், நாளை நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 1001 முதல், 2099 வரையிலான தேர்வர்கள், 23ம் தேதி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இப்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு மட்டுமே, "ஹால் டிக்கெட்" வழங்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி