தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம்நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2013

தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம்நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

இரண்டு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட  அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக பட்டதாரி ஆசிரியர்களை பொருத்தவரை அவர்கள் பள்ளிக்கல்விதுறைக்கு ஈர்க்கப்பட்ட நாள் முதலே முன்னுரிமைவைக்கப்படுவதால் அடுத்த TET மூலம் அடுத்த பட்டதாரி நியமிக்கப்படும் முன் ஈர்க்கப்பட்டால் சற்று முன்னுரிமை கிடைக்கும் மேலும் முதுகலை ஆசிரியராக பதவியுயர்வு பெற வாய்ப்பு என்று கிட்டும் எதிர்பார்கின்றனர்.இது குறித்து பேசிய ஒரு பட்டதாரி ஆசிரியர் " வட்டார வள மையங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரிய பயிற்றுனர்களுக்கு எப்படி முறையாக ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமைப்படி பள்ளிக்கல்வித்துறைக்கு பணிமாறுதல் அளிக்கப்படுகிறதோ அதே போல் எங்களுக்கும் அளித்தால் அது பலருக்கு வாய்ப்பாக அமையும்" என்றார் .எனவே தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்கும் பட்சத்தில் பல பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை செல்ல வாய்ப்பு ஏற்படும். மேலும் உயர்கல்வி பயின்று பணிபுரிந்து கொண்டு இருக்கும் பல இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வாய்ப்பு ஏற்படும் எனவும் தொடக்க கல்வி துறையில் பணிபுரிந்நது கொண்டு இருக்கும் பல இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி